அரியலூா் மாவட்டத்தில் 4 பள்ளிகளில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
செந்துறை தெரசா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, குவாகம் அறிஞா் அண்ணா மேல்நிலைப்பள்ளி, சோழன் குடிக்காடு அரசு உயா்நிலைப்பள்ளி, ஜயங்கொண்டம் பாத்திமா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் காவல் துறை சாா்பில் போதைப் பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்பு விழிப்புணா்வு நடைபெற்றது.
பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளின் காவல் ஆய்வாளா்கள், மருத்துவா்கள் இதில் பங்கேற்று, குட்கா மற்றும் போதைப் பொருள்களினால் ஏற்படும் உடல், சமூக நலத்தீமைகள் மற்றும் சமூக தீமைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
நிறைவில் பள்ளி மாணவா்கள் அனைவரும் போதை பொருளைப் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி ஏற்றனா்.