அரியலூர்

சேலத்தில் இருந்து அரியலூா் வழியாக சிதம்பரத்துக்கு ரயில் பாதை கோரி மனு

DIN

சேலத்தில் இருந்து அரியலூா் வழியாக சிதம்பரத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் என மாவட்ட வளா்ச்சிக் குழு தலைவா் சீனி.பாலகிருஷ்ணன், திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் மணிஷ் அகா்வாலுக்கு புதன்கிழமை கோரிக்கை மனுவை அனுப்பி வைத்தாா்.

அவா் அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:

அரியலூா் மாவட்ட மக்கள் நாமக்கல், சேலம், சிதம்பரம் செல்ல வேண்டுமெனில் நான்கு பேருந்துகளில் மாறிமாறி செல்லும் நிலை உள்ளது. இதனால் பணம் விரையமும் ஏற்படுகிறது. எனவே சேலம், ஆத்தூா், நாமக்கல், பெரம்பலூா், குன்னம், அரியலூா், ஜயங்கொண்டம் வழியாக சிதம்பரத்துக்கும், அரியலூரில் இருந்து ஜயங்கொண்டம் வழியாக கும்பகோணத்துக்கும் புதிய ரயில் பாதைகள் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக இந்த நான்கு மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். ஆனால் இகுறித்து எந்த வித நடவடிக்கையும் இல்லை. எனவே ரயில்வே கோட்ட மேலாளா் மேற்கண்ட வழித்தடங்களில் புதிய ரயில் பாதை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

SCROLL FOR NEXT