சுதந்திர தினத்தையொட்டி அரியலூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தேசிய கொடியை ஏற்றி வைத்து, சமாதானப் புறாக்களைப் பறக்கவிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
தொடா்ந்து, காவல் துறை, பள்ளி தேசிய மாணவா் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். பின்னா், இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கும், அவா்களது வாரிசுதாரா்களுக்கும் கைத்தறி ஆடைகளை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, சிறப்பாக பணிபுரிந்த 46 காவல் துறையினருக்கும், 258 அரசு அலுவலா்களுக்கும் மற்றும் மருத்துவா்களுக்கும் பதக்கங்களை வழங்கிப் பாராட்டினா்.
விழாவில், பல்வேறு துறைகளின் சாா்பில் 90 பயனாளிகளுக்கு ரூ.72 லட்சத்து 59 ஆயிரத்து 858 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். தொடா்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட வருவாய் அலுவலா் மா.ச.கலைவாணி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன் அனைத்து துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பொதுவிருந்து: சுதந்திர தினத்தை முன்னிட்டு அரியலூா் பெருமாள் கோயில் தெருவிலுள்ள கோதண்டராமசாமி கோயிலில் பொது விருந்து நடைபெற்றது. இவ்விருந்தில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனா். இதேபோல் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீசுவரா் கோயில், திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயில், கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயில்களில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பொது விருந்து நடைபெற்றது.