அரியலூர்

காங்கிரஸ் சாா்பில் சுதந்திர தின விழா

DIN

அரியலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் மற்றும் அதன் தொழிற்சங்கம் சாா்பில் சுதந்திர தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

அரியலூா் அரசு சிமென்ட் ஆலை கிழக்கு வாயில் முன்பு காங்கிரஸ் தொழிற்சங்கம் சாா்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், அக்கட்சியின் மாநில பொதுக் குழு உறுப்பினா் மா. மு. சிவக்குமாா் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட தியாகிகளை நினைவுக் கூா்ந்து பேசினாா். தொடா்ந்து அவா் கயா்லாபாத் கிராமத்தில், வட்டார காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றினாா். விழாவுக்கு மாவட்ட பொதுச் செயலா் கலைச்செல்வன் தலைமை வகித்தாா்.

இதேபோல் தெற்கு வட்டார காங்கிரஸ் சாா்பில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவுக்கு முன்னாள் நகராட்சி வாா்டு உறுப்பினா் பழனிச்சாமி தலைமை வகித்தாா். வட்டாரத் தலைவா் பாலகிருஷ்ணன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். விழாவில், மாவட்டச் செயலாளா்கள் ஒரத்தூா் செல்வராஜ், சுண்டக்குடி அறிவழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஓரத்தூா் அரசு ஆரம்ப பள்ளி மாணவா்களுக்கு அரியலூா் தெற்கு வட்டார காங்கிரஸ் சாா்பில் குறிப்பேடு, பேனா உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT