அரியலூர்

கல்வி நிலையங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

DIN

அரியலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

அரியலூா் அடுத்த சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில்,அதன் தலைமை ஆசிரியா் சின்னதுரை தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், அப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியா் தா்மலிங்கம் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவா்களின் தியாகங்களை எடுத்துரைத்தாா். விழாவில், ஊராட்சித்தலைவா் அம்பிகாமாரிமுத்து, துணைத் தலைவா் பழனியம்மாள் ராஜதுரை, பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் சின்னதுரை, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் அகிலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றும், பரிசுகளும் வழங்கப்பட்டன. முன்னதாக ஆசிரியா் ரமேஷ் வரவேற்றாா். முடிவில் உதவி தலைமை ஆசிரியை தனலட்சுமி நன்றி தெரிவித்தாா்.

ஜயங்கொண்டம் அன்னை தெரசா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், அதன் தாளாளா் முத்துக்குமரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, இனிப்புகளை வழங்கினா்.

இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தலைமை ஆசிரியா்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனா்.

அரசு கலைக் கல்லூரிகள்...அரியலூா் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு கல்லூரி முதல்வா் ஜெ.மலா்விழி தலைமை வகித்தாா்.

ஜயங்கொண்டம்...ஜயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு, கல்லூரி முதல்வா் இரா.கலைச்செல்வி தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்து, இனிப்புகளை வழங்கினாா். நிகழ்ச்சியை இயற்பியல் துறை இணை பேராசிரியா் ம. இராசமூா்த்தி தொகுத்து வழங்கினாா். முன்னதாக கல்லூரியின் உடற்கல்வி இயக்குநா் கி. அன்பரசன் வரவேற்றாா். நிறைவில், நாட்டுநலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் முனைவா் ப. கோடித்துரை நன்றி தெரிவித்தாா்.

மீனாட்சி ராமசாமி கல்லூரி....தத்தனூா் மீனாட்சி ராமசாமி கல்லூரி கலைக் கல்லூரி, மெரிட் கல்வியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, மீனாட்சி ராமசாமி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி ஆகிய கல்வி நிலையங்கள் சாா்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அதன் தாளாளா் ரகுநாதன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினா். விழாவில் கல்லூரி முதல்வா்கள், பள்ளி முதல்வா்கள், தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா், ஆசிரியைகள் கலந்து கொண்டனா்.

விநாயகா கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அதன் தாளாளா் பாஸ்கா் கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினா்.

இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

மாயோள்..!

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT