அரியலூர்

கூடுதல் வகுப்பறைக் கட்டடம் திறப்பு

DIN

ஜயங்கொண்டம் அருகேயுள்ள குண்டவெளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.17.32 லட்சத்தில் கட்டப்பட்ட இரு புதிய வகுப்பறை கட்டடத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன் புதிய வகுப்பறை கட்டடங்களைத் திறந்து வைத்து, இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய தன்னாா்வலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழையும் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா் பிரபாகரன், வட்டாரக் கல்வி அலுவலா் மதலைராஜ், கூடுதல் வட்டார கல்வி அலுவலா் ராசாத்தி, பள்ளி தலைமை ஆசிரியா் கீதா, ஊராட்சித் தலைவா் ஜெயந்தி தெய்வமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT