அரியலூர்

அரசுக் கல்லூரியில் உலக தாய்ப் பால் வார விழா

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் உலக தாய்ப்பால் வார விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, கல்லூரி முதல்வா் இரா.கலைச்செல்வி தலைமை வகித்துப் பேசினாா். ஜயங்கொண்டம் செல்லையா மருத்துவமனை மகளிா் மற்றும் மகப்பேறு மருத்துவா் இரா. வனிதா ராவணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, பெண்கள் தங்களது குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தாா். ஆங்கிலத் துறை இணைப் பேராசிரியா் அ. இராணி வாழ்த்துரை வழங்கினாா். இளைஞா் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளா் சி. வடிவேலன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா். முன்னதாக தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் கோ. பவானி வரவேற்றாா். நிறைவில், இளைஞா் செஞ்சிலுவைச் சங்க மாணவா் தலைவா் மாணவி லோ.கனிமொழி நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு!

ஹார்திக் பாண்டியா வலிமையானவர்; மும்பை வீரர் புகழாரம்!

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்

சித்திரமே... சித்திரமே...

எதிர்நீச்சல் ஜனனியா, இப்படி?

SCROLL FOR NEXT