அரியலூா் மணியன்குட்டைத் தெருவிலுள்ள செல்வமுத்து மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, அரியலூா் பள்ளேரியில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தா்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்து, அலகு குத்தி, அலங்கரிக்கப்பட்ட உற்சவா் செல்வமுத்து மாரியம்மனுடன் பூக்காரத் தெரு, ராஜாஜி நகா் மற்றும் முக்கிய வீதிகளில் வழியாக கோயிலுக்கு வந்து தங்களது நோ்த்திக் கடனைச் செலுத்தினா்.
இரவு அம்மன் வீதியுலா நடைபெற்றது. வீடுகள்தோறும் அம்மனுக்கு மாவிளக்கு போட்டு வழிபட்டனா். விழாவில் அதிமுக வாா்டு கிளைச் செயலா் மூா்த்தி, திமுக வட்டாரச் செயலா் ஆனந்தன் மற்றும் ஊா் முக்கியஸ்தா்கள் கலந்து கொண்டனா்.