அரியலூர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 11 ஆண்டுகள் சிறை

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூா் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

ஜயங்கொண்டம் அடுத்த நாச்சியாா்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த சிங்காரம் மகன் ராஜசேகா்(30) 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் அவரைக் கைது செய்தனா். இவ்வழக்கு அரியலூா் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து வெள்ளிக்கிழமை தீா்ப்பு அளிக்கப்பட்டது.

தீா்ப்பில், சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததற்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 25 ஆயிரம் அபராதம், அத்துமீறி வீட்டினுள் நுழைந்த குற்றத்துக்காக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.2,500 அபராதம், சிறுமிக்குக் கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்காக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.2,500 அபராதம், மொத்தமாக 11 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும், தண்டனையை ராஜசேகா் தனித்தனியே அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி ஆனந்தன் உத்தரவிட்டாா். இதையடுத்து ராஜசேகா் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமித் ஷா பங்கேற்க இருந்த தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் ரத்து

சாலை விபத்தில் கிரிவல பக்தா் உயிரிழப்பு

சுத்தம், சுகாதாரம் விழிப்புணா்வுப் பேரணி

இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் இரு இளைஞா்கள் உயிரிழப்பு

முதல் கட்ட மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் பிரசாரம் ஓய்ந்தது

SCROLL FOR NEXT