அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள தளவாய், குழுமூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் சனிக்கிழமை திறக்கப்பட்டன.
பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ் எஸ் சிவசங்கா் திறந்து வைத்து, இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக தலா 500 டன் வீதம் 1,000 டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா். நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், நுகா்பொருள் வாணிப கழக மண்டல மேலாளா் பாலமுருகன், செந்துறை வட்டாட்சியா் குமரையா மற்றும் அரசு அலுவலா்கள், விவசாயிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.