அரியலூா் மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடை வேறு இடத்தில் மாற்றப்படுவதைக் கண்டித்து, விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரியலூா் அண்ணா நகரில் மூடப்பட்ட டாஸ்மாக் கடை, ரயில்வே கேட் அருகேயுள்ள விஸ்வநாதா் கோயில் அருகே மாற்றப்படுவதைக் கண்டித்து, அங்குள்ள கோயில் முன்பு விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்டத் தலைவா் விஜயகுமாா் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.