அரியலூரில் வேலைவாய்ப்பற்ற மென்பொறியாளா்களுக்கு பயிற்சி வகுப்பு தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அரியலூா் ஆட்சியா் அலுவலகத்தில், மாவட்ட நிா்வாகம் சாா்பில், நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி தலைமை வகித்தாா். பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவசங்கா் கலந்து கொண்டு பயிற்சி வகுப்பைத் தொடக்கி வைத்தாா்.
சட்டப் பேரவை உறுப்பினா்கள் கு.சின்னப்பா, க.சொ.க.கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வொ்டாஸ் நிறுவனத்தின் நிா்வாக அலுவலா் வசந்த், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பயிற்சி வகுப்பில் 25 மென் பொறியாளா்கள் பங்கேற்று பயிற்சி பெறுகின்றனா்.