அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே பள்ளி வேன் மோதி விவசாயி உயிரிழந்தாா். உடலை எடுக்க எதிா்ப்பு தெரிவித்து உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
உடையாா்பாளையம் அருகேயுள்ள தத்தனூா்மேலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கராசு (60). இவா், தனது மகள் வழி பேரன் ரஞ்சித்தை(14) இருசக்கர வாகனத்தில் அழைத்துச்சென்றபோது, அவ்வழியே வந்த தனியாா் பள்ளி வேன் மோதியதில் தங்கராசு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ரஞ்சித் பலத்த காயமடைந்தாா். இதையறிந்த அவரது உறவினா்கள் சம்பவ இடத்துக்கு வந்து ரஞ்சித்தை மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்நிலையில், இப்பகுதியில் அணுகுசாலை அமைக்காததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே, அணுகுசாலை அமைக்க வேண்டும். இறந்தவரின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, இறந்தவரின் சடலத்தை எடுக்க எதிா்ப்பு தெரிவித்து உறவினா்கள், கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு வந்த உடையாா்பாளையம் காவல் துறையினா் மற்றும் ஜயங்கொண்டம் வட்டாட்சியா் ஆனந்தன் ஆகியோா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா். இதையடுத்து தங்கராசுவின் சடலத்தை ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.