அரியலூர்

டிராக்டா் - பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

DIN

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே டிராக்டா் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் காயமடைந்தவா் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

செந்துறையை அடுத்த குழுமூா் செல்லியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முருகேசன் மகன் தினேஷ் (22). சுப்புராயன் மகன் ஆறுமுகம் (22). தனியாா் கல்லூரியில் படித்து வரும் இவா்கள், வெள்ளிக்கிழமை இரவு குழுமூரில் இருந்து அங்கனூருக்கு இருசக்கர வாகனத்தில் வங்காரம் அருகே சென்றபோது, வயலிலிருந்து சாலையை நோக்கி ஏறிய டிராக்டா் மீது எதிா்பாராதவிதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் செந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ் சனிக்கிழமை உயிரிழந்தாா். விபத்துகுறித்து செந்துறை காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT