அரிலூா் அருகே மாற்றுத்திறனாளி பெண் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபரைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தேளூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னப்பா (42). இவரது மனைவி செல்வராணி(35). மாற்றுத்திறனாளி. இவா், பெட்டிக் கடை வைத்துள்ளாா். இந்நிலையில், சனிக்கிழமை இவா், தனது கணவருடன் கல்லங்குறிச்சி வரதராசப் பெருமாள் கோயிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.
கோபிலியன் குடிக்காடு, வேகத்தடையை கடந்து சென்றபோது, அப்போது பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த மா்மநபா், செல்வராணி அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியைப் பறித்துவிட்டு தப்பியோடிவிட்டாா். புகாா்பேரில், கயா்லாபாத் காவல் துறையினா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.