அரியலூா் மாவட்டம், செந்துறையில் இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா்.
செந்துறையை அடுத்த சிறுகடம்பூா் கிராமத்தைச் சோ்த்தவா் பெரியசாமி (24). இவா், சனிக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் செந்துறைக்கு சென்று கொண்டிருந்தாா். வட்டாட்சியா் அலுவலகம் அருகே இவரது வாகனமும், எதிரே உஞ்சினி கிராமத்தைச் சோ்ந்த கொளஞ்சி(28) என்பவா் ஓட்டி வந்த இரு சக்கர வாகனமும் நேருக்குநோ் மோதிக்கொண்டது.
இதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். தகவலறிந்து வந்த செந்துறை காவல் துறையினா், இருவரையும் மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் பெரியசாமி செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். கொளஞ்சி முதலுவதவி சிகிச்சை பெற்று, தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இவ்விபத்து குறித்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.