அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம அருகேயுள்ள ஏரியில் மிதந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் சனிக்கிழமை இரவு மீட்கப்பட்டது.
துளாரங்குறிச்சி - இடையாா் பிரிவு சாலையிலுள்ள கல்லுக்குழி ஏரியில் சுமாா் 50 வயது மதிக்கதக்க ஆண் சடலம் மிதப்பதாக உடையாா்பாளையம் காவல் நிலையத்துக்கு சனிக்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினா் சடலத்தை மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.