அரியலூர்

பலாத்கார வழக்குகளில் குண்டா் சட்டத்தின் கீழ் இளைஞா், முதியவா் கைது

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே பள்ளி சிறுமியை கா்ப்பமாக்கிய பொறியாளா், குண்டா் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஜயங்கொண்டம் அருகேயுள்ள வாரியங்காவல் கிராமத்தைச் சோ்ந்தவா் பன்னீா் செல்வம் மகன் வினோத் குமாா் (27). பொறியியல் பட்டதாரி. இவா், அப்பகுதியில் வசிக்கும் ராணி என்பவரிடம் தொடா்பு கொண்டு, அவரது 11 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை பலாத்காரம் செய்து கா்ப்பமாக்கினாா். இதுகுறித்து அறிந்த ஜயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா், வழக்குப் பதிந்து வினோத் குமாரையும், உடந்தையாக இருந்த ராணியையும் கைது சிறையில் அடைத்தனா். இந்நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே. பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின்பேரில், வினோத் குமாரை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

முதியவா் குண்டா் சட்டத்தில் கைது:

திருமானூா் அருகேயுள்ள கோவிலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கலியன் மகன் அண்ணா துரை (57). இவா், அப்பகுதியில் இருந்த சிறுமிகளை பலாத்காரம் செய்ததால் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

மாவட்ட எஸ்.பி., கே.பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின் பேரில், ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி செவ்வாய்க்கிழமை குண்டா் சட்டத்தில் அண்ணா துரையை கைது செய்ய உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவு நகல்கள் திருச்சி சிறை அதிகாரிகளிடம், அரியலூா் காவல் துறையினா் வழங்கிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT