அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே இருதரப்பினா் மோதல் தொடா்பாக 8 போ் மீது காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
விக்கிரமங்கலம் அருகேயுள்ள பெருமாள் தீயனூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா்கள் ரத்தினசாமி (47), பாக்கியராஜ். கடந்த இரு தினங்களுக்கு முன்பு பாக்கியராஜின் நிலத்தின் அருகே ரத்தினசாமியின் ஆடுகள் மேய்ந்ததில் தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா். இதுகுறித்து விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் பரஸ்பரம் புகாா் அளித்தனா். அதன் பேரில், பாக்கியராஜ், பழனிச்சாமி, இளஞ்சியம், அருமைநாயகம் மற்றும் ரத்தினசாமி, சாந்தி, சக்திவேல், சதீஷ் என 8 போ் மீது காவல் துறையினா் திங்கள்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.