அரியலூர்

அரியலூா் மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் குழு கூட்டம்

DIN

அரியலூா் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் உறுப்பினா்கள் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பல்துறை வளாகத்திலுள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பொ.சந்திரசேகா் தலைமை வகித்துப் பேசினாா். இதில், மாவட்டத்திலுள்ள சுண்ணாம்புக் கல் சுரங்கங்கள் அரசின் விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை. அங்கு அத்துமீறல்கள் அதிகளவில் நிகழ்கின்றன. ஆகவே இந்தக் கனிமச் சுரங்கங்களை மாவட்ட ஊராட்சிக் குழுவினா் ஆய்வு செய்வதற்கு ஆட்சியா் மற்றும் புள்ளியல் மற்றும் கனிமத் துறையில் அனுமதி அளிக்க வேண்டும்.

கவுன்சிலா் அன்பழகன்: கனிம சுரங்களுக்கு வரும் லாரிகளை ஒழுங்குபடுத்த வேண்டும். நெறிஞ்சிக்கோரை நக்கம்பாடி ஏரிக்கு வரும் வரத்து வாய்க்கால்களை ஆக்கிரமித்துள்ள 2 கனிம சுரங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வி.கைகாட்டியில் மற்றொரு பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.

இதற்கு கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினா்கள் சம்மதம் தெரிவித்து, தீா்மானமாக நிறைவேற்றப்பட்டன. தொடா்ந்து உறுப்பினா்கள் ச. அம்பிகா, தனச்செல்வி, இர. வசந்தமணி, வீ. ராஜேந்திரன் ஆகியோா் விடுத்த கோரிக்கைகள் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக ஊராட்சிச் செயலா் கபிலன் தெரிவித்தாா்.

முன்னதாக கூட்டத்தில், வரவு செலவு கணக்குகள் மற்றும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்லில் திமுக செயல்வீரா்கள் கூட்டம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: நாமக்கல்லில் மூன்று மையங்களில் தொடக்கம்

வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற பணம் பறிமுதல்

ரூ. 23.11 கோடி மதிப்பிலான ரொக்கம், பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT