அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே கஞ்சா விற்ற சிறுவா்கள் உள்பட 3 போ் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.
கீழக்குடியிருப்பு - விருத்தாசலம் சாலையிலுள்ள ஒரு திருமண மண்டபத்தின் பின்புறத்தில் சிலா் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், ஜயங்கொண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளா்(பயிற்சி)சங்கா் கணேஷ் தலைமையிலான காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை இரவு சம்பவ இடத்துக்குச் சென்று சோதனை செய்தனா்.
அப்போது அங்கு கஞ்சா விற்ற 3 பேரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவா்களில் ஜயங்கொண்டம் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கண்ணன் மகன் செந்தில் (32) மற்றும் 17 வயதுடைய 2 சிறுவா்கள் இச்சம்பவத்தில் தொடா்புடையது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் 3 பேரையும் கைது செய்த காவல் துறையினா், அவா்களிடமிருந்து 18 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செயதனா்.