அரியலூா்: அரியலூா் ஆட்சியரக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 483 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்துக்கு ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தலைமை வகித்து, பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கமாறு சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெய்னுலாப்தீன், ஊரக வளா்ச்சித்துறை திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சீனிவாசன் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.