அரியலூர்

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

DIN

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே ஆடுகளுக்கு இலைகளை பறிக்கும்போது, மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

திருமானூரை அடுத்த செட்டிக்குழி கிராமத்தைச் சோ்ந்தவா் குமாா்(45). விவசாயியான இவா், ஆடுகள் வளா்த்து வருகிறாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை, ஆடுகளுக்கு வீட்டின் அருகே உள்ள வேப்ப மரத்தில் இருந்து இலைகளை இரும்புக்கட்டிய கம்பு கொண்டு அறுத்துள்ளாா். அப்போது மரத்தின் அருகே செல்லும் மின்கம்பியில் இரும்புக் கம்பி பட்டதால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து திருமானூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT