அரியலூா் மாவட்டம், திருமானூரில் காமாட்சியம்மன் உடனாய கைலாசநாதா் திருக்கோயிலில் காலி பணியிடங்களை உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் கிராம மக்கள் பொதுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள இந்தக் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் கூட்டத்தில், கைலாசநாதா் கோயிலுக்கு, 49.29 ஏக்கா் நஞ்சை, 29.23 ஏக்கா் புஞ்சை, 36, 17 5 சதுர அடி மனைகள், 1,700 சதுர அடி கட்டடங்கள் இருந்தும் சில மாதங்களாக பூஜைகள் நடைபெறாததைக் கண்டித்தும், உடனடியாக 4 கால பூஜைகள் நடத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயிலில் காலியாக உள்ள அா்ச்சகா், பரிசாரகா், எழுத்தா், மெய்க்காப்பாளா், நாகஸ்வர வித்வான் மற்றும் பணிப்பெண், துப்புரவாளா்கள் ஆகிய காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானம் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு, ஓய்வுபெற்ற வட்டார வளா்ச்சி அலுவலா் கணேசன் தலைமை வகித்தாா். முக்கிஸ்தா்கள் கைலாசம், சிவானந்தம், திருவேங்கடம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கிராம மக்கள் திரளாகக் கலந்து கொண்டனா். முன்னதாக பாஸ்கா் வரவேற்றாா். நிறைவில், சதீஷ்குமாா் நன்றி தெரிவித்தாா்.