அரியலூர்

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரியலூா் ஆட்சியா் ஆய்வு

DIN

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த பொன்பரப்பியிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

அங்கு, மகப்பேறு பரிசோதனைக்கு வந்த தாய்மாா்களிடம், போதிய அளவில் இரும்புச்சத்து மாத்திரை, தடுப்பூசிகள் அளிக்கப்படுகிா எனக் கேட்டறிந்து, கா்ப்பிணித் தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினாா்.

தொடா்ந்து அவா், அனைத்து மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஊசி, மருந்து, மாத்திரைகள் போதிய அளவில் இருப்பு உள்ளதா என ஆய்வு மேற்கொண்டாா். மேலும் அங்கு சிகிச்சைக்கு வந்த பொதுமக்களிடம் மருத்துவா்கள் உரிய நேரத்துக்கு வருகை தருகின்றனரா, மருத்துவப் பரிசோதனைகள் அதன் முடிவுகள் உரிய நேரத்தில் வழங்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகின்ா எனவும் கேட்டறிந்தாா்.

பின்னா், பொன்பரப்பி அரசு மேல்நிலைப்பள்ளியை பாா்வையிட்ட ஆட்சியா், மழைக்காலங்களில் மாணவா்களுக்கு சுகாதாரமான முறையில் உணவைத் தயாா் செய்து வழங்க வேண்டும். சேதமடைந்த வகுப்பறைகளுக்கு மாற்றாக புதிய வகுப்பறைகளை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கீதாராணி, வட்டார மருத்துவ அலுவலா் ரேவதி மற்றும் மருத்துவ பணியாளா்கள், ஊழியா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT