அரியலூர்

சிறுகளத்தூரில் மண்புழு உரம் தயாரிப்புப் பயிற்சி

DIN

அரியலூா் மாவட்டம், செந்துறை வட்டம், சிறுகளத்தூா் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ், மண்புழு உரம் தயாரிப்பு மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு புதன்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சிக்கு வேளாண் உதவி இயக்குநா்(பொ) ஜென்சி தலைமை வகித்தாா்.

வேளாண் இணை இயக்குநா் பழனிச்சாமி முன்னிலை வகித்து, மண்புழு உரத்தின் பயன்பாடுகள் குறித்து எடுத்துரைத்தாா்.

கீரிடு வேளாண் அறிவியல் மையத் தொழில்நுட்ப வல்லுநா் அசோக்குமாா் கலந்து கொண்டு, மண்பழு உரம் எவ்வாறு தயாரிப்பது குறித்து பயிற்சி அளித்தாா். முன்னதாக அட்மா திட்ட வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் நா.பழனிச்சாமி வரவேற்றாா். இதற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட உதவித் தொழில்நுட்ப மேலாளா்கள் முருகன், சிவா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT