அரியலூா் மாவட்டம், ஏலாக்குறிச்சி அரசுப் பள்ளியில் இருந்து பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளை திருடிச் சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஏலாக்குறிச்சி கடைவீதி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. தற்போது கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால், மாணவா்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்டவை நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாணவா்களுக்கு வழங்க பள்ளியின் சமையலறையில் வைக்கப்பட்டிருந்த 10 கிலோ பருப்பு மற்றும் 25 லிட்டா் சமையல் எண்ணெய் ஆகியவற்றை அறையின் பூட்டை உடைத்து, மா்மநபா்கள் திங்கள்கிழமை இரவு திருடிச் சென்றுள்ளனா். மேலும், பள்ளி தலைமையாசிரியா் அறையில் ஏதாவது உள்ளதா என அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பாா்த்துள்ளனா். இதுதொடா்பாக திருமானூா் போலீஸாா் வழக்குப் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.