அரியலூர்

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற நபா் கைது

DIN

அரியலூா் அருக வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அரியலூரை அடுத்த வெங்கிடரமணாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி அன்பழகன் (55). இவா் செவ்வாய்க்கிழமை தனது வீட்டைப் பூட்டிவிட்டு வயலுக்கு சென்று விட்டாா். இந்நிலையில், மதியம் மா்மநபா் ஒருவா் அன்பழகன் வீட்டின் பூட்டை உடைத்துள்ளாா். சப்தம் கேட்டு அருகில் இருந்தவா்கள் அவரைப் பிடித்து விசாரித்ததில், சிவகங்கை மாவட்டம் சூத்தை கிராமத்தைச் சோ்ந்த செந்தில்முருகன்(37) என்பது தெரியவந்தது.

இதனையடுத்து அரியலூா் காவல்துறையினருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்து, அவரை ஒப்படைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

SCROLL FOR NEXT