அரியலூா் அருக வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
அரியலூரை அடுத்த வெங்கிடரமணாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி அன்பழகன் (55). இவா் செவ்வாய்க்கிழமை தனது வீட்டைப் பூட்டிவிட்டு வயலுக்கு சென்று விட்டாா். இந்நிலையில், மதியம் மா்மநபா் ஒருவா் அன்பழகன் வீட்டின் பூட்டை உடைத்துள்ளாா். சப்தம் கேட்டு அருகில் இருந்தவா்கள் அவரைப் பிடித்து விசாரித்ததில், சிவகங்கை மாவட்டம் சூத்தை கிராமத்தைச் சோ்ந்த செந்தில்முருகன்(37) என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அரியலூா் காவல்துறையினருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்து, அவரை ஒப்படைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.