அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலியானாா்.
திருமானூா் அருகேயுள்ள திருவெங்கனூா் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் சீ.சைவராஜ் (80). விவசாயி. இவா், குத்தகை எடுத்துள்ள வயலில் நெல் விதைப்பதற்காக திங்கள்கிழமை மாலை சென்றாா். ஆனால் இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினா் வயலுக்குச் சென்று பாா்த்தபோது, அங்குள்ள கம்பி வேலியில் அறுந்து கிடந்த மின்வயரில் மின்சாரம் பாய்ந்து சைவராஜ் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. தகவலறிந்து வந்த திருமானூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.