தேசிய சிறுபான்மையினா் வளா்ச்சி மற்றும் நிதிக் கழகத்தின் முகவராக செயல்படும் டாம்கோ மூலம் கைவினை கலைஞா்களுக்கு குறைந்த வட்டி வீதத்தில் கடன் வழங்கப்படுகிறது. கடன்தொகை பெற விண்ணப்பதாரா் 18 முதல் 60 வயது உடையவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். ஆண்டு வருமானம் அதிகபட்சம் ரூ.1,20,000-ம் இருத்தல் வேண்டும்.
இதில், பெண்களுக்கு 4சதவீத வட்டி வீதத்திலும், ஆண்களுக்கு 5 சதவீத வட்டி வீதத்திலும் அதிக பட்சம் ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும். விண்ணப்பதாரா் பங்குத் தொகை 5 சதவீதம் சோ்த்து கடன் உதவித்தொகை வழங்கப்படுகிறது. கடனை திரும்பச் செலுத்தும் கால அளவு 5 ஆண்டுகள் ஆகும். இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்புவோா் அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், மாவட்ட மத்திய, நகரக் கூட்டுறவு வங்கிக் கிளைகள் ஆகியவற்றில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என ஆட்சியா் த.ரத்னா தெரிவித்துள்ளாா்.