அரியலூா்: அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே மதுபானம் விற்ற பெண் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.
விக்கிரமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சரத்குமாா் தலைமையிலான போலீஸாா், வெள்ளிக்கிழமை இரவு முத்துவாஞ்சேரி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது முத்துவாஞ்சேரி வடக்குத் தெருவைச் சோ்ந்த சகுந்தலா(40) என்பவா் தனது வீட்டின் பின்புறம் பகுதிகளில் மதுபானங்ளை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்றுக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப் பதிந்து சகுந்தலாவைப் போலீஸாா் கைது செய்தனா்.