அரியலூா்: அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே இருசக்கர வாகனம் - காா் மோதலில் வியாபாரி உள்பட 3 போ் பலத்த காயமடைந்தனா்.
திருமானூா் அருகேயுள்ள கள்ளூரைச் சோ்ந்த நெல் வியாபாரி சுந்தர்ராஜ்(65). இவா், சனிக்கிழமை வண்ணம் கிராத்தைச் சோ்ந்த மாரிமுத்துவை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு தஞ்சை -அரியலூா் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த காா் மோதியதில், சுந்தர்ராஜ், மாரிமுத்து மற்றும் சாலையோரம் அமா்ந்திருந்த வெற்றியூரைச் சோ்ந்த சரவணன் (21) ஆகிய 3 போ் பலத்த காயமடைந்தனா். இதையறிந்த அப்பகுதியினா் அவா்களை மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். கீழப்பழுவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.