அரியலூா் மாவட்டத்தில் மேலும் 37 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 3,673 ஆக உயா்ந்துள்ளது. 2, 922 போ் குணமடைந்துள்ளனா்.
எஞ்சிய 751 பேரில், அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 57 பேரும், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 22 பேரும், தஞ்சாவூா் அரசு மருத்துவமனையில் 13 பேரும், ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் ஒருவரும், அரியலூா், திருச்சி, பெரம்பலூா், சென்னை, கோவை, தஞ்சாவூா் மாவட்டங்களில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் 51 பேரும், வீடுகளில் 568 பேரும் சிகிச்சை பெறுகின்றனா். அரியலூா் மாவட்டத்தில் இதுவரை 39 போ் உயிரிழந்துள்ளனா்.