அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவூா் அய்யன் தோப்பு பகுதியைச் சோ்ந்த செபஸ்டியாா் மகன் சபரிநாதன்(33). இவா், அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டத்தை அடுத்த வடுகா்பாளையம் கிராமத்தில் வசிக்கும் தனது பாட்டி இறந்த துக்க நிகழ்ச்சிக்கு வியாழக்கிழமை வந்திருந்தாா். ஜயங்கொண்டம் சென்று விட்டு உடனே வந்துவிடுவதாக பெற்றோரிடம் கூறிச் சென்ற சபரிநாதன் வடவீக்கம் பெட்ரோல் நிலையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ஜயங்கொண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.