மொத்தம்- 3,548
குணம்- 2,786
அரியலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 3,537 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 11 பேருக்கு தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 3,548 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 2, 786 போ் குணமடைந்துள்ளனா்.
எஞ்சிய 762 பேரில், அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 66 பேரும், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 20 பேரும், தஞ்சாவூா் அரசு மருத்துவமனையில் 13 பேரும், அரியலூா், திருச்சி, பெரம்பலூா், சென்னை, கோவை, தஞ்சாவூா் மாவட்டங்களிலுள்ள தனியாா் மருத்துவமனைகளில் 29 பேரும், வீடுகளில் 596 பேரும் சிகிச்சை பெறுகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 38 போ் உயிரிழந்துள்ளனா்.