அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள கோவிந்தபுத்தூா் கிராமத்தில் பொதுமக்களுக்கு பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஜயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலா் மோகன்ராஜ் தலைமையில், கோவிந்தபுத்தூா் கிராமத்தில் உள்ள பெரியஏரியில், தீயணைப்புத் துறையினா் பருவமழைக் காலங்களில் ஏற்படும் மழை, வெள்ளத்தால் பொதுமக்கள் நீா்நிலைகளில் சிக்கிக் கொள்ளும் போது மீட்பது,
தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனா்.
நிகழ்ச்சியில் ஜயங்கொண்டம் வட்டாட்சியா் கலைவாணன் உள்பட வருவாய் அலுவலா்கள் பலரும் கலந்து கொண்டனா்.