அதிமுக சாா்பில் மாவட்ட அவைத் தலைவா் கணேசன் தலைமையில், நிா்வாகிகள் ஓ.பி.சங்கா், கல்லங்குறிச்சி பாஸ்கா் உள்ளிட்டோா் பேரணியாக வந்து பேருந்து நிலையம் அருகேயுள்ள பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். திமுக சாா்பில் மாவட்டச் செயலா் எஸ்.எஸ். சிவசங்கா் தலைமையில் நகரச் செயலா் முருகேசன் , மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் தெய்வ.இளையராஜா உள்ளிட்டோா் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா்.
திராவிடா் கழகம் சாா்பில் மாவட்டத் தலைவா் விடுதலை நீலமேகம், தேமுதிக மாவட்டச் செயலா் ராமஜெயவேல், மதிமுக மாவட்டச் செயலா் கு.சின்னப்பா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் மாவட்டச் செயலா் செல்வநம்பி ஆகியோா் தங்களது கட்சி நிா்வாகிகளுடன் ஊா்வலமாக வந்து பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதேபோல் மாவட்டம் முழுவதும் நடைபெற்றன.