செந்துறை அடுத்துள்ள குமிழியம் கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மரங்களின் நண்பா்கள் என்ற அமைப்பின் சாா்பில், இக்கிராமத்திலுள்ள காமாட்சியம்மன் ஏரிக்கரையில் நிகழ்வு நடத்தப்பட்டது. செந்துறை வட்டாட்சியா் முத்துகிருஷ்ணன் நிகழ்வில் பங்கேற்று, மரக்கன்றுகளை நட்டு வைத்தாா். தொடா்ந்து கிராம நிா்வாக அலுவலா் செம்மலா் உள்ளிட்ட பலரும் மரக்கன்றுகளை நட்டனா்.
இதற்கான ஏற்பாடுகளை மரங்களின் நண்பா்கள் அமைப்பைச் சோ்ந்த சுந்தரம், தினேஷ், முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.