அரியலூா் மாவட்டம், அன்னிமங்கலம் கிராமத்தில் கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமில் குடற்புழு நீக்கம், சினை ஊசி, சினைப் பரிசோதனை என 1,038 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் ஹமீதுஅலி, ஊராட்சித் தலைவா் சரவணன், மருத்துவா்கள் செந்தாமரை, மணிகண்டன் உட்பட பலா் முகாமில் பங்கேற்றனா்.