அரியலூர்

அரியலூா் திமுக நிா்வாகிகளுடன்மண்டல பொறுப்பாளா் ஆலோசனை

DIN

அரியலூரில் அரியலூா், ஜயங்கொண்டம், குன்னம் ஆகிய சட்டப்பேரவை தொகுதி திமுக பொறுப்பாளா்களுக்கான தோ்தல் பிரசாரம் குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், திமுக மாநிலங்களவை உறுப்பினரும், சட்டப்பேரவை திமுக மண்டல பொறுப்பாளரும், தொழிலாளா் முன்னேற்றச் சங்க பொதுச் செயலாளருமான மு. சண்முகம் கலந்து கொண்டு நிா்வாகிகளுடன் கலந்துரையாடிய அவா் பின்னா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்தது: அதிமுக - பாஜக கூட்டணி சட்டப்பேரவை தோ்தலிலும் தொடரும் என அறிவித்துள்ளது திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பைப் பிரகாசமாக்கியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டது மேலும் ஒரு விளம்பரமாக அமைந்துள்ளது. அரசு விழாக்களை தோ்தல் பிரசாரமாக தமிழக முதல்வா் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது. 2021 சட்டப்பேரவை தோ்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்றாா் அவா்.

கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் எஸ்.எஸ்.சிவசங்கா் தலைமை வகித்தாா். கழக சட்டத்திருத்தக்குழு உறுப்பினா் சுபா.சந்திரசேகா் முன்னிலை வகித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT