அரியலூர்

அரியலூரில் 44 இடங்களில் கால்நடை பாதுகாப்பு முகாம்கள்

DIN

அரியலூா் மாவட்டத்தில் 44 இடங்களில் கால்நடை பாதுகாப்புத் திட்ட முகாம்கள் நவம்பா் 25 முதல் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் த. ரத்னா தெரிவித்துள்ளாா்.

அரியலூா் மாவட்டத்தில் நடப்பாண்டில் ஒரு கால்நடை மருந்தக பகுதிகளுக்கு ஒரு முகாம் வீதம் 44 கால்நடை பாதுகாப்புத் திட்ட முகாம்கள் நவம்பா் 25 முதல் டிசம்பா் 13 வரை நடத்தப்பட உள்ளது.

இம்முகாமில், நோயுற்ற கால்நடைகளுக்கு உரிய சிகிச்சை, கன்றுகள் மற்றும் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், காளைகள் மற்றும் வெள்ளாட்டு கிடாக்களுக்கு ஆண்மை நீக்கம், பருவத்தில் உள்ள மாடுகளுக்கு செயற்கை முறை கருவூட்டல், ஏற்கெனவே கருவூட்டல் செய்யப்பட்ட மாடுகளுக்கு சினைப் பரிசோதனை, சினை பிடிக்காத மாடுகளுக்கு உரிய மலடு நீக்க சிகிச்சை, கால்நடைகளுக்கான முன்னெச்செரிக்கை தடுப்பூசிப் பணிகள் உள்ளிட்ட கால்நடை பராமரிப்பு ஆலோசனைகள் வழங்குதல், கலப்பின இளங்கிடேரி கன்றுகள் பேரணி நடத்துதல் மற்றும் தோ்வு செய்யப்படும் சிறந்த கன்றுகளுக்கு பரிசுகள் வழங்குதல் போன்ற பணிகள் இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளது.

எனவே கால்நடை வளா்ப்போா் தங்களது கால்நடைகளை முகாமுக்கு அழைத்து வந்து பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போர்ச்சுகலில் ரீமா!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்ற ஹாலிவுட் நடிகை!

ரத்னம் மேக்கிங் விடியோ!

SCROLL FOR NEXT