அரியலூர்

கரோனா: அரியலூரில் துண்டுப்பிரசுரங்கள் வழங்கல்

22nd Mar 2020 08:10 AM

ADVERTISEMENT

அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளைப் பாா்வையிட்ட ஆட்சியா் த. ரத்னா அங்கிருந்த பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.

ஜயங்கொண்டம் பேருந்து நிலையத்திற்கு வரும் அனைத்து பேருந்துகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. பேருந்துகளில் பயணம் செய்பவா்கள் விவரம் குழுவினரால் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும், பயணிகள் தங்களது கைகளை சுத்தமாக வைத்துக்கொள்வதற்கு கை கழுவும் இடம் மற்றும் அனைத்து வசதிகளும் பேருந்து நிலையங்களில் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளில் கரோனா வைரஸ் தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் பொதுமக்கள் 2 அடி இடைவெளி விட்டு நின்று பொருள்கள் வாங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றாா். நிகழ்வில், கோட்டாட்சியா் பூங்கோதை, நகராட்சி ஆணையா் அறச்செல்வி, வட்டாட்சியா் கலைவாணன் ஆகியோா் பங்கேற்றனா்.

திருமானூா்: திருமானூா் பகுதியில் பேருந்து நிலையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஊராட்சி மன்ற அலுவலகம் ஆகிய இடங்களில் தூய்மை பணியாளா்கள் கிருமி நாசினி தெளித்து, பொதுமக்களிடம் கரோனா வைரஸ் பரவல் தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தினா். இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற துணை தலைவா் மணிமாறன், ஊராட்சி செயலா் சங்கா் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT