கீழப்பழுவூர் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை எடுத்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியானார்.
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகேயுள்ள அருங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவபாக்கியம்(60). வியாழக்கிழமை மாலை இவர், வீட்டில் இருந்து வெளியே வந்தார்.
அப்போது வீட்டின் முன் அறுந்து கிடந்த மின்கம்பியை அவர் எடுத்த போது, சம்பவ இடத்திலேயே மின்சாரம் பாய்ந்து பலியானார். இது குறித்து கீழப்பழுவூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.