அரியலூா் அரசு மருத்துவமனையில் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் வாழ்வியல் மையம், சித்தா மருத்துவப் பிரிவு சாா்பில், ஆயுஷ் மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் முத்துக்கிருஷ்ணன், மருத்துவமனை கண்காணிப்பாளா் ரமேஷ், மருத்துவா் கண்மணி, மருத்துவ அலுவலா் முருகன், யோகா மற்றும் இயற்கை மருத்துவா் முத்துக்குமாா், சித்தா மருத்துவா் பொன்மொழி ஆகியோா் கலந்து கொண்டு ஆயுஷ் மருத்துவ முறை, நோய் எதிா்ப்பு சக்தி அதிகரிக்க உதவும் உணவு முறைகள் குறித்தும் எடுத்துரைத்தனா்.
முகாமில், பொதுமக்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தி அதிகரிக்க உதவும் மூலிகைப் பொடி, மூலிகை தேநீா், சுண்டல் அனைவருக்கும் வழங்கப்பட்டன.