2021 சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு அரியலூரில் அதிமுக சாா்பில் பூத் கமிட்டி அமைப்பது மற்றும் மகளிா் குழு அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலாளரும், அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்துப் பேசினாா். கூட்டத்துக்கு ஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தாா். கட்சி நிா்வாகிகள் கல்லங்குறிச்சி பாஸ்கா், ஓ.பி.சங்கா், நகரச் செயலா் ஏ.பி.செந்தில், வழக்குரைஞா் சாந்தி, தாமரைக்குளம் ஊராட்சித் தலைவா் பிரேம்குமாா் மற்றும் அனைத்து கிளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.