பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த அரியலூர் மாவட்டம், தா. பழூர் அருகேயுள்ள கார்குடியைச் சேர்ந்த சிஆர்பிஃஎப் வீரர் சிவசந்திரன் குடும்பத்துக்கு பெங்களூர் மேன்கைன்ட் மருந்து உற்பத்தி நிறுவனம் சார்பில் ரூ.2.50 லட்சம் நிதியுதவி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
அந்நிறுவனத்தின் சார்பில் அரியலூர் மாவட்ட தலைமை மருத்துவமனையின் முன்னாள் தலைமை மருத்துவர் கிருஷ்ணசாமி சிவசந்திரன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, சிவசந்திரன் மனைவி காந்திமதியிடம் காசோலையை வழங்கினார். பெங்களூர் மேன்கைன்ட் மருத்து உற்பத்தியின் மண்டல மேலாளர் ஜெகதீஸ்வரன், மருத்துவ பிரதிநிதி திவாகர், அரியலூர் அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் இளையராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.