அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தம்பதியை தாக்கிய 5 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
உடையார்பாளையம் அருகிலுள்ள வாணாதிராயன்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி மகன் வீரராகவன் (34) . இவருக்கும், அதே ஊரை சேர்ந்த ஞானசேகரனுக்கும் (37) இடையே முன்விரோதம் இருந்தது .
இந்நிலையில் திங்கள்கிழமை இரவு வீரராகவன் தெருவில் நடந்து சென்றபோது ஞானசேகரன் அவரை வழிமறித்து திட்டி தாக்கினார்.
தடுக்க வந்த வீரராகவன் உறவினர் மகேஷ் (32 ) மற்றும் அவரது மனைவி விமலாதேவி ஆகியோரை ஞானசேகரன் உறவினர்கள் தாக்கியுள்ளனர். இதில் தம்பதியினர் காயமடைந்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து ஞானசேகரன்,இவரது உறவினர்கள் சிதம்பரம் பாரதிதாசன், சாமிக்கண்ணு, முருகபாண்டியன்,நாராயணன் ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.