உடையார்பாளையம் அருகே தம்பதியை தாக்கிய5 பேர் கைது

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தம்பதியை தாக்கிய 5 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தம்பதியை தாக்கிய 5 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
உடையார்பாளையம் அருகிலுள்ள வாணாதிராயன்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி மகன் வீரராகவன் (34) . இவருக்கும், அதே ஊரை சேர்ந்த ஞானசேகரனுக்கும் (37) இடையே முன்விரோதம் இருந்தது .
இந்நிலையில் திங்கள்கிழமை இரவு வீரராகவன் தெருவில் நடந்து சென்றபோது ஞானசேகரன் அவரை வழிமறித்து திட்டி தாக்கினார்.  
தடுக்க வந்த வீரராகவன் உறவினர் மகேஷ் (32 ) மற்றும் அவரது மனைவி விமலாதேவி ஆகியோரை ஞானசேகரன் உறவினர்கள் தாக்கியுள்ளனர். இதில் தம்பதியினர் காயமடைந்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து ஞானசேகரன்,இவரது உறவினர்கள்  சிதம்பரம் பாரதிதாசன், சாமிக்கண்ணு, முருகபாண்டியன்,நாராயணன் ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com