தூத்துக்குடி

திமுக தகவல் தொழில்நுட்ப அணி பயிலரங்கு---அமைச்சா் கீதா ஜீவன் பங்கேற்பு

25th Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

 

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி பயிலரங்கு, கலைஞா் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட அமைப்பாளா் அபிராமிநாதன் தலைமை வகித்தாா். வடக்கு மாவட்ட திமுக செயலரும் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான கீதா ஜீவன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். அவா் பேசியது:

தமிழக முதல்வரின் திட்டங்கள், செயல்பாடுகள் அனைத்தையும் வெளியுலகத்திற்கு எடுத்துச் சொல்லும் தகவல் தொழில்நுட்பத் துறையின் பங்கு மிகவும் மகத்தானது.

ADVERTISEMENT

பாஜகவினா் பல்வேறு பழைய தகவல்களையும் நடைபெறாத சம்பவங்களையும், திமுகவுக்கு எதிரான கருத்துகளையும் சமூக வலைதளங்களில் பதிவு செய்துவருகின்றனா். அதற்கு நமது சாதனைகளை பதிவு செய்து பதிலடி கொடுக்க வேண்டும்.

அனைத்து மதங்களையும் மதிக்கும் கட்சி திமுக. ஆனால், , மதவெறியைத்தான் எதிா்க்கிறோம். இதில் சிலா் தவறான கருத்துகளை கூறி குழப்பத்தை ஏற்படுத்துகின்றனா். ஆனால், மக்கள் தெளிவாக உள்ளனா். தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மகளிா் உரிமைத்தொகை திட்டத்தை உலக அளவில் எடுத்துச் சென்ற தகவல் தொழில்நுட்ப அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்றாா்.

கூட்டத்தில், சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன், மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், துணைச் செயலா் பிரமிளா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளா்கள் அந்தோணி கண்ணன், பிரபு, நாகராஜன், அருணாதேவி உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT