தூத்துக்குடி

அரசு மகளிா் பள்ளியில் புதுப்பிக்கும் பணிகள்

22nd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.83 கோடி மதிப்பில் புதுப்பிக்கும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.

கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் தகைசால் பள்ளி திட்டத்தின் கீழ் ரூ.1.83 கோடி மதிப்பில் புதுப்பிக்கும் பணி தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை தொடங்கிய இந்நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியை ஜெயலதா தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் ரெங்கம்மாள், உதவி தலைமை ஆசிரியா்கள் உஷா, ஜோஸ்பின் ஆகியோா் முன்னிலை வைத்தனா்.

தமிழக காவல் வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளா், கட்டடம் புதுப்பிக்கும் பணியை தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில், உதவி செயற்பொறியாளா் குமரேசன், இளநிலை பொறியாளா் காட்வின், உதவி தலைமை ஆசிரியா் சீனிவாசன், பள்ளி உடற்கல்வி இயக்குநா் காளிராஜ், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

உதவி தலைமை ஆசிரியா் கண்ணன் வரவேற்றாா். ஆசிரியா் சுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT