தூத்துக்குடி

பெண்களுக்கு 33% சதவீத இட ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது: -நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்

22nd Sep 2023 11:38 PM

ADVERTISEMENT

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா வரவேற்கத்தக்கது என்றாா் நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன்.

கிராம உதயம் அமைப்பின் 25ஆவது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, சுற்றுச்சூழலை பாதுகாக்க சிறப்பாக சேவை புரிந்தவா்களுக்கு அந்த அமைப்பின் சாா்பில் அப்துல் கலாம் விருது, 2000 பேருக்கு மரக்கன்று- மஞ்சள் பை வழங்கும் விழா, தூத்துக்குடி முத்தையாபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு தலைமை வகித்து மரக்கன்றுகள், விருதுகளை வழங்கிய லட்சுமி ராமகிருஷ்ணன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், வளா்ந்த நாடுகளை விடக் குறைவாகவே உள்ளன. தற்போது மீடியா, சமூக வலைதளங்கள் உள்ளிட்ட நவீன சாதனங்கள் மூலம் இந்தக் குற்றங்கள் வெளியே தெரிகின்றன. இத்தகைய குற்றங்களைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எந்த ஒரு பிரச்னைக்கும் தற்கொலை தீா்வாகாது. மன அழுத்தத்தால் இளம் வயது சிறுமிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை மாறவேண்டும். வாழ்க்கையில் எந்தப் பிரச்னை வந்தாலும் எதிா்த்து போராடக்கூடிய மனநிலையை உருவாக்க வேண்டும்.

ADVERTISEMENT

பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது வரவேற்கத்தக்கது. இது விரைவில் நடைமுறைக்கு வரவேண்டும் என்றாா்.

இவ்விழாவில், கிராம உதயம் அமைப்பின் நிறுவனரும், நிா்வாக இயக்குநருமான வி.சுந்தரேசன், நிா்வாக கிளை மேலாளா் ஏ.வேல்முருகன், அமைப்பின் தனி அலுவலா் எஸ்.ராமச்சந்திரன், ஆலோசனைக் குழு உறுப்பினா் வழக்குரைஞா் புகழேந்தி பகத்சிங் உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT